Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விவசாயிகள் போராட்டமா? குளிரா? கூட்டத்தொடர் ரத்து ஏன்? – மத்திய அரசு விளக்கம்!

Webdunia
செவ்வாய், 15 டிசம்பர் 2020 (12:38 IST)
மத்திய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது தொடர்பாக பல சர்ச்சைகள் எழுந்துள்ளன.

கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதலாகவே நாடாளுமன்ற கூட்டத்தொடர்கள் நேரடியாக நடைபெறாமல் உள்ளன. இந்நிலையில் தற்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் குவிந்து போராட்டம் நடத்தி வருவதால் குளிர்கால கூட்ட தொடரை கூட்டி இதுகுறித்து முடிவெடிக்க வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் வலியுறுத்தி வந்தன.

இந்நிலையில் இந்தியாவில் தற்போது கொரோனா தாக்கத்தின் காரணமாக குளிர்கால கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகவும், ஜனவரியில் பட்ஜெட் கூட்டம் நடத்தப்பட உள்ளதாகவும் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அவை இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரும் வரை கூட்டத்தொடர் நடத்துவதை தவிர்க்க மத்திய அரசு திட்டமிடுவதாக கூறப்படுகிறது. ஆனால் விவசாயிகள் போராட்டம் குறித்த விவாதத்தை நடத்த விரும்பாத காரணத்தாலேயே கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் வாக்காளர் திருத்தம் நிறைவு! 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!

பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 31 பேர் பலி, 147 பேர் படுகாயம்.. சேத விவரங்கள்!

துபாய் ஷேக்கிற்கு பாலியல் பார்ட்னர் வேண்டும்.. மாணவியுடன் சாமியார் பேசிய வாட்ஸ் அப் உரையாடல்..!

எண்ணூர் அனல்மின் நிலையத்தில் பயங்கர விபத்து: 9 தொழிலாளர்கள் பலி.. பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

ஹமாஸ் அமைப்புக்கு 4 நாட்கள் கெடு விதித்த டிரம்ப்.. விளைவுகள் கடுமையாக இருக்கும் என எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments