Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா? – மத்திய அரசு தகவல்!

Webdunia
வியாழன், 22 ஏப்ரல் 2021 (11:14 IST)
கொரோனாவுக்கு எதிராக இந்தியா முழுவதும் தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் தடுப்பூசி போட்டவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா உறுதியானது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வரும் நிலையில் தினசரி பாதிப்பு 3 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசிகள் போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படுவது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் தடுப்பூசி போட்டு கொண்டவர்களில் 10 ஆயிரத்தில் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதியாவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி கோவாக்சின் தடுப்பூசியை முதல் டோஸ் எடுத்துக் கொண்ட 93,56,436 பேரில் 4208 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இரண்டாவது தவணை செலுத்திக் கொண்ட 17,37,178 பேரில் 698 பேருக்கும் கொரோனா உறுதியானதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னை துன்புறுத்த வேண்டும் என்ற நோக்கம் இருந்தது: சுப்ரீம் கோர்ட் நீதிபதி மீது ஓய்வு நாளில் நீதிபதி குற்றச்சாட்டு

மத்திய அரசு நிதி வழங்கவில்லை.. சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்த தமிழக அரசு..!

நேற்று அதிர்ச்சி கொடுத்த பங்குச்சந்தை, இன்று மீண்டும் ஏற்றம்.. சென்செக்ஸ் நிலவரம் என்ன?

இறங்குவது போல் சென்ற தங்கம் மீண்டும் உச்சம்.. இன்று ஒரே நாளில் ரூ.1760 உயர்வு..!

இந்தி தெரியாது போடா என இனி கூற வேண்டிய அவசியம் இல்லை: மொழி பெயர்த்து தருகிறது கூகுள்

அடுத்த கட்டுரையில்
Show comments