Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகாரம் தர முடியாது! – மத்திய அரசு மறுப்பு!

Webdunia
ஞாயிறு, 12 மார்ச் 2023 (15:38 IST)
இந்தியாவில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட அங்கீகார அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் தன்பாலின ஈர்ப்பு குறித்த பல விவாதங்கள் கிளம்பியுள்ள நிலையில், பல நாடுகளில் மக்கள் போராட்டத்தை தொடர்ந்து தன்பாலின ஈர்ப்பு மற்றும் திருமணங்களை சில நாட்டு அரசுகள் அங்கீகரித்துள்ளன. ஆனால் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் தன்பாலின திருமணங்களுக்கு சட்ட ரீதியான அங்கீகாரம் அளிக்கப்படவில்லை. தன்பாலின் காதல் மற்றும் திருமணத் தடை சட்டங்களை மட்டும் சில ஆண்டுகள் முன்னதாக இந்திய அரசு நீக்கியது. என்றாலும் தன்பாலின திருமணங்கள் சட்டரீதியாக இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை. எனினும் இந்தியாவில் பலர் தன்பாலின திருமணங்களை செய்து கொள்கின்றனர்.

இந்நிலையில் தன்பாலின திருமணங்களை சட்டரீதியாக அங்கீகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில் பதில் அளித்த மத்திய அரசு “கணவன், மனைவி, குழந்தைகள் என இருக்கும் இந்தியாவின் குடும்ப கட்டமைப்பு இணையாக தன்பாலினத் திருமணங்களை பொருத்தி பார்க்க முடியாது. தன்பாலின திருமணங்களை அங்கீகரிக்காததால் எந்த ஒரு அடிப்படை உரிமையும் மீறப்படவில்லை” என்று தெரிவித்துள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments