Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெளிநாட்டு ஏ.சிக்களுக்கு தடை; உள்நாட்டு ஏ.சி வாங்குங்க! – மத்திய அரசு தடாலடி!

Webdunia
வெள்ளி, 16 அக்டோபர் 2020 (16:45 IST)
இந்தியாவில் தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்க பல்வேறு திட்டங்களை வகுத்து வரும் மத்திய அரசு தற்போது வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏ.சிகளுக்கு தடை விதித்துள்ளது.

இந்தியாவில் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும், தற்சார்பு பொருளாதாரத்தை அதிகரிக்கவும் முன்னதாக வாகனங்களுக்கான டயர்கள், டிவி செட், அகர்பத்தி போன்றவற்றை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தியாவில் ஏர்கண்டிஷனர்கள் பயன்பாடு அதிகரித்துள்ள நிலையில் வெளிநாட்டு நிறுவனங்களின் ஏசிக்களை உள்நாட்டில் இறக்குமதி செய்து விற்பது அதிகரித்துள்ளது.

உள்நாட்டில் ஏசி விற்பனைக்கு ஆண்டுக்கு ரூ.500 கோடி முதல் ரூ.600 கோடி வரை சந்தை மதிப்பு உள்ள நிலையில் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஏசிக்களில் 90% ஏ.சிக்கள் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டு ஏ.சிக்களுக்கு மத்திய அரசு விதித்துள்ள தடை சீனாவை வணிக ரீதியாக பாதிக்கும் என்பதோடு, உள்நாட்டு நிறுவனங்களையும் ஊக்குவிக்கும் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments