Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது! – மத்திய அரசு பதில்

Webdunia
வியாழன், 3 செப்டம்பர் 2020 (15:04 IST)
வங்கி கடன்களில் விதிக்கப்பட்ட வட்டிக்கு மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பொருளாதாரம் முடங்கிய நிலையில் வங்கிகள் கடன் வாங்கி வட்டி கட்டாதவர்களுக்கு வட்டியின் மீது வட்டி விதித்துள்ளன. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இன்று நடைபெற்ற விசாரணையில் பதில் அளித்த மத்திய அரசு “வங்கி கடன்களின் வட்டி மீதான வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது. எல்லா துறைகளும் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பொருளாதாரத்தை வலுவிலக்க செய்யும் வகையில் முடிவெடுக்க முடியாது. கடன் தொகையை திருப்பி செலுத்துவதற்கான அழுத்தத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. அதில் “வட்டிக்கு வட்டி விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கை என்ன? பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருக்கும் நிலையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது எனில் அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது?” என கேள்வி எழுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆன்லைனில் ஷாப்பிங் செய்தால் மனநலம் பாதிக்கும்: ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

தேர்தல் முறைகேடு: ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள்: ராகுல் காந்திக்கு ராஜ்நாத் சிங் சவால்..!

வெளிமாநிலத்தவர் தமிழக வாக்காளர்களாக மாறினால் பாதிப்பு ஏற்படும்: துரைமுருகன்

ஒரு கையில் புற்றுநோய் பாதித்த குழந்தை..இன்னொரு கையில் உணவு.. ஃபுட் டெலிவரி செய்யும் பெண்..!

கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்ற மனைவி.. உபியில் ஒரு அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments