Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி

மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார் நிதியமைச்சர் அருண் ஜேட்லி
, திங்கள், 22 செப்டம்பர் 2014 (13:55 IST)
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உடல் நலக் குறைவால் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.
 
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லிக்கு சில வருடங்களாக நீரிழிவு நோய் இருந்து வருகிறது. சமீபகாலமாக அவருக்கு சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இல்லாததால் கடந்த 1 ஆம் தேதி  டெல்லியில் உள்ள சாகெட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
அங்கு அவருக்கு  லேப்ராஸ்கோப் முறையில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.பின்னர் அவர் வீடு திரும்பினார் தொடர்ந்து தனது அலுவல்களைக் கவனித்து வந்தார்
 
இந்நிலையில் இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பின் நடைபெறும் பரிச்சொதனைக்காக இன்று அவர் மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
 
அவர் நாளை பிற்பகல் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil