விவசாய கரண்ட்டுக்கும் மீட்டர் கட்டாயம்..1000 ரூபாய்க்கு மேல போனா..! – மத்திய அரசு உத்தரவு!

Webdunia
புதன், 23 டிசம்பர் 2020 (09:22 IST)
இந்தியாவில் மின் இணைப்புகள் மற்றும் மின் கட்டணங்கள் குறித்த புதிய விதிமுறைகளை மத்திய மின்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இந்தியா முழுவதும் வீட்டு மின்சாரம், விவசாய மின் இணைப்புகள் ஆகியவற்றுக்கான புதிய வழிமுறைகளின்படி, விவசாய மின் இணைப்பிற்கும் இனி கட்டாயம் மின் மீட்டர் பொருத்த வேண்டும்.

மேலும் மின் கட்டணம் ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக இருந்தால் ஆன்லைன் மூலமாக மட்டுமே தொகையை செலுத்த வேண்டும். குறிப்பிட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்பட்டால் நிறுத்தப்படுவதற்கு முன்பாக குறுஞ்செய்தி அல்லது உள்ளூர் ஊடகங்கள் மூலமாக மின் நிறுத்தம், மீண்டும் மின்சாரம் எப்போது வரும் என்ற விவரங்கள் தெரிவிக்கப்பட வேண்டும்.

மேலும் மின்துறை சேவையில் குறையோ, புகார்களோ இருந்தால் இனி நுகர்வோர் நீதிமன்றத்தை நாடலாம் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: 48 மணி நேரத்தில் தீவிரமடையும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி

28 புதிய ரயில்களை வாங்க சென்னை மெட்ரோ நிர்வாகம் டெண்டர்..! எத்தனை கோடி மதிப்பு?

நள்ளிரவில் வீடு வீடாக சென்று உதவி செய்யுங்கள் என்ற கூச்சலிட்ட பெண்.. பொதுமக்கள் அச்சம்..!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கும் தேதி.. 10 மசோதாக்கள் நிறைவேற்ற திட்டம்..!

இன்று முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை மீண்டும் தொடங்கும் விஜய்! காஞ்சிபுரத்தில் முதல் நாள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments