Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே-1 முதல் செல்போன் ரோமிங் கட்டணங்கள் குறைகின்றன - டிராய் அறிவிப்பு

Webdunia
வெள்ளி, 10 ஏப்ரல் 2015 (13:03 IST)
மே 1ஆம் தேதி முதல் செல்போன் ரோமிங் கட்டணங்களும், எஸ்.எம்.எஸ். கட்டணங்களும் முதல் குறைக்கப்படுவதாக டிராய் அறிவித்துள்ளது.
 
செல்போன் சேவை நிறுவனங்கள் வசூலிக்கும் தேசிய ரோமிங் அழைப்புகளுக்கான கட்டணத்தையும், எஸ்.எம்.எஸ். கட்டணத்தையும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘டிராய்’, குறைத்துள்ளது. இந்த அறிவிப்புகள் வருகின்ற மே 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று அறிவித்துள்ளது.
 

 
ரோமிங் எல்லைக்குல் இருக்கும்போது, தேசிய அழைப்புக்கான (எஸ்.டி.டி.) அதிகபட்ச கட்டணத்தை ரூபாய் 1.50இல் இருந்து ரூபாய் 1.15 ஆக குறைத்துள்ளது. அதுபோல ரோமிங் எல்லைக்குல் இருக்கும்போது, செய்தி சேவை (எஸ்.எம்.எஸ்.) கட்டணத்தை ரூபாய் 1.50இல் இருந்து 38 பைசாவாக குறைத்துள்ளது.
 
இது தவிர ரோமிங்கில் இருக்கும்போது, இன்கமிங் அழைப்புக்கான கட்டணத்தை 75 பைசாவில் இருந்து 45 பைசாவாக குறைத்துள்ளது.
 
மேலும், உள்ளூர் செய்தி சேவையின் (எஸ்.எம்.எஸ்.) அதிகபட்ச கட்டணத்தை ஒரு ரூபாயில் இருந்து 25 பைசாவாக குறைத்துள்ளது. மேலும், உள்ளூர் அழைப்புக்கான அதிகப்பட்ச கட்டணம் ஒரு ரூபாயில் இருந்து 80 பைசாவாகவும் குறைகிறது.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments