Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்போன்- ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியது

செல்போன்- ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியது

Webdunia
செவ்வாய், 2 பிப்ரவரி 2016 (22:39 IST)
செல்போன் உற்பத்தி மற்றும் ஸ்மார்ட் போன் விற்பனை 10 கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.
 

 
இது குறித்து, தொலைத் தொடர்பு மற்றும் தகவல்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது:-
 
கடந்த டிசம்பர் மாதம் மட்டும் மின்னணு சார்ந்த தொழில்துறையில் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.
 
இந்த முதலீட்டின் மூலம் சுமார் 30 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில், 15 புதிய கைபேசி தொழிற்சாலைகளுக்கும் அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2014-ம் ஆண்டு வரை ஆறு கோடியே 80 லட்சமாக இருந்த கைபேசி உற்பத்தி, கடந்த 2015 ஆம் ஆண்டில் பத்து கோடியாக உயர்ந்துள்ளது என்றார். 

எனக்கு பிரதமர் ஆசை இல்லை.. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்..!

மின் கட்டணம் செலுத்தாததால் இருளில் மூழ்கிய ராமேஸ்வரம் பாம்பன் பாலம்.. சுற்றுலா பயணிகள் அதிருப்தி

மீண்டும் உச்சம் சென்றது பங்குச்சந்தை.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

முல்லைப் பெரியாரில் புதிய அணை கட்டுவதா.? கேரளாவுக்கு அன்புமணி கண்டனம்..!!

இனிமேல் மோடி தான் பிரதமர் என எப்படி சொல்வார் பிரசாந்த் கிஷோர்? சரவணன் அண்ணாதுரை

Show comments