Webdunia - Bharat's app for daily news and videos

Install App

10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதா? சிபிஎஸ்இ விளக்கம்

Siva
செவ்வாய், 13 பிப்ரவரி 2024 (18:44 IST)
சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வரும் நிலையில் எந்த வினாத்தாளும் கசியவில்லை என்றும் இந்த வதந்திகளை மாணவர்கள் மற்றும் பெற்றோர் நம்ப வேண்டாம் என்றும் சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.  
 
சிபிஎஸ்இ  10, 12ம் வகுப்பு வினாத்தாள்கள் முன்கூட்டியே கசிந்து விட்டதாக பரவும் தகவல் தவறானது என்று தெரிவித்துள்ள சிபிஎஸ்சி  எந்த வினாத்தாளும் கசியவில்லை என்றும் கசிந்த வினா தாள்கள் தான் வரும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது  
 
மேலும் பொது தேர்வுகள் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சிபிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது  மேலும் ஏற்கனவே அறிவித்தபடி வரும் 15ஆம் தேதியிலிருந்து 10, 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் தொடங்கும் என்றும் சிபிஎஸ்இ அறிவித்துள்ளது  
 
மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்கத்தில் இவ்வாறு சிலர் வதந்தி பரப்புகின்றனர் என்றும் சிபிஎஸ்இ தனது விளக்கத்தில் தெரிவித்துள்ளது.
 
Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வெடித்த குப்பைத்தொட்டி.. வீசியெறியப்பட்ட தொழிலாளி பரிதாப பலி! - என்ன நடந்தது?

தாயை கொன்றுவிட்டு தற்கொலை செய்துக் கொண்ட மகன்! கடைசியில் நடந்த திருப்பம்!

8 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு! விரைவில் அதிகரிக்கும் வெயில்! - வானிலை ஆய்வு மையம்!

சாதி ஆணவ படுகொலைகளுக்கு காரணம் திருமாவளவன்தான்! - எச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு!

சரிந்து விழுந்த 150 அடி உயரமான தேர்! தமிழர் உட்பட இருவர் பரிதாப பலி! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments