ரூ.800 கோடி கடன் பெற்று மோசடி செய்த இன்னொரு தொழிலதிபர் : என்ன நடக்குது பொதுத்துறை வங்கிகளில்?

Webdunia
திங்கள், 19 பிப்ரவரி 2018 (11:35 IST)
கிங் ஃபிஷர் அதிபர் விஜய் மல்லையா ரூ.9000 கோடி, வைரவியாபாரி நீரவ் மோடி ரூ.11 ஆயிரம் கோடி வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்த விவகாரமே இன்னும் ஜீரணிக்க முடியாத நிலையில் உள்ளபோது, தற்போது இன்னொரு தொழிலதிபர் சட்டத்திற்கு புறம்பாக ரூ.800 கோடி வங்கிகளில் கடன் பெற்றுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
 
ரோடோமேக் பென்ஸ் நிறுவனத்தின் தலைவர் விக்ரம் கோத்தாரி, அலகாபாத் வங்கி, பாங்க் ஆஃப் இந்தியா, பாங்க் ஆஃப் பரோடா, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் யூனியன் ஆகிய ஐந்து  பொதுத்துறை வங்கிகளில் 800 கோடி ரூபாய் அளவிற்கு கடன் பெற்று அதனை திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டதாக கூறப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன்னர் விக்ரம் கோத்தாரிக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் சிபிஐ ரெய்டு செய்ததாகவும், ரெய்டுக்கு பின்னர் விக்ரம் கோத்தாரி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
ஆயிரக்கணக்கில் கடன் பெற்ற சிறு வணிகர்களையும் விவசாயிகளையும் மிரட்டி பணத்தை வசூல் செய்யும் வங்கிகள், தொழிலதிபர்களுக்கு கோடி கோடியாய் சட்டவிரோதமாக கடன் கொடுத்து தற்போது நஷ்டத்தை சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6 மாதமாக மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்: ஈபிஎஸ் கண்டனம்..!

விஜய் கிரிக்கெட் பால் மாதிரி!.. அவருக்குதான் என் ஓட்டு!.. பப்லு பிரித்திவிராஜ் ராக்ஸ்!...

20 வருடங்களாக வைத்திருந்த உள்துறையை பாஜகவுக்கு தாரை வார்த்த நிதிஷ்குமார்.. என்ன காரணம்?

7ஆம் வகுப்பு மாணவி பள்ளி மாடியில் இருந்து விழுந்து உயிரிழப்பு: ஆசிரியர்கள் மீது பெற்றோர் குற்றச்சாட்டு

கோவை மெட்ரோ.. திருப்பி அனுப்பிய மத்திய அரசின் அறிக்கையில் 3 முக்கிய விளக்கம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments