Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அடுத்த டார்கெட் அகிலேஷ் யாதவ்வுக்கா? சம்மன் அனுப்பிய சிபிஐ..!

Siva
வியாழன், 29 பிப்ரவரி 2024 (06:40 IST)
உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளதை அடுத்து மத்திய அரசின் அடுத்த டார்கெட் அவர் தானா என்ற கேள்வி எழுந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா கூட்டணியில் உள்ள அரசியல் கட்சி தலைவர்களுக்கு தொடர்ச்சியாக அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை ஆகிய அமைப்புகளால் பிரச்சனை எழுந்து வருவதாக குற்றச்சாட்டு ஏற்பட்டுள்ளது

ஏற்கனவே அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தொடர்ந்து அனுப்பி வரும் அமலாக்கத்துறை தற்போது அகிலேஷ் யாதவுக்கு சிபிஐ அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒரே நாளில் 13 திட்டங்களுக்கு அகிலேஷ் யாதவ் முதல்வராக இருந்தபோது அனுமதி அளித்ததாகவும் இது தொடர்பாக 11 பேர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சிபிஐ சோதனை நடத்தியது

அப்போது சட்டவிரோதமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அப்போது முதல்வராக இருந்த அகிலேஷ் யாதவ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்

இந்த நிலையில் இன்று அதாவது பிப்ரவரி 29ஆம் தேதி அகிலேஷ் யாதவ் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்த சம்மன் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த வழக்கு.. சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்..!

அல்ப Viewsக்கு ஆசப்பட்டு.. செல்போன் டவரில் எசக்கு பிசக்காக மாட்டிக் கொண்ட யூட்யூபர்! – போராடி மீட்ட போலீஸ்!

பிரதமர் உரையை புறக்கணித்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு..!!

விஜய் நீதிமன்றம் சென்று நீட் விலக்கு பெறட்டும்: தமிழக பாஜக மாநில செயலாளர் ஸ்ரீனிவாசன்

நீட் தேர்வுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! சென்னையில் திமுக மாணவர் அணி போராட்டம்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments