Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கார்த்தி சிதம்பரத்திடம் விசாரனை முடிந்தது - சிபிஐ

Webdunia
ஞாயிறு, 4 மார்ச் 2018 (18:35 IST)
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்தி சிதம்பரத்தில் விசாரணை முடிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 
ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீடு பெற்ற விவகாரத்தில் முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட காத்திக் சிதம்பரத்தை ஒருநாள் காவலில் எடுத்து விசரரிக்க சிபிஐக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
ஒருநாளில் எந்த வாக்குமூலத்தையும் பெற முடியவில்லை என்று 14 நாட்கள் காவல் வேண்டும் என்று சிபிஐ டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் கோரியது. ஆனால் டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கியது. 
 
இந்திராணி முகர்ஜி, பீட்டர் முகர்ஜி மற்றும் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் ஆகியோர் வாக்குமூலத்தை முன்வைத்து கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனால் கார்த்தி சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகர்ஜி ஆகியோருடன் நேருக்கு நேர் விசாரணை நடத்த சிபிஐ முடிவு செய்ததது.
 
அதன்படி மும்பை பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி மற்றும் பீட்டர் முகரியுடன் சேர்த்து கார்த்தி சிதம்பரத்திடம் சிபிஐ நடத்திய விசாரணை நிறைவு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
விசாரணை முடிந்து வெளியே வந்த கார்த்தி சிதம்பரம், தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய்யானது. அரசியல் நோக்கத்தில் தன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரிப்பன் மாளிகையில் பேச்சுவார்த்தை: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்திற்குத் தீர்வு கிடைக்குமா?

சுதந்திர தினத்தன்று இறைச்சி விற்பனைக்கு தடை.. பொதுமக்கள் அதிர்ச்சி..!

14 வயது சகோதரிக்கு ராக்கி கட்டி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர்: அதிர்ச்சி சம்பவம்!

இன்றிரவு சென்னை உள்பட 8 மாவட்டங்களில் மழை.. வானிலை எச்சரிக்கை..!

மனைவி மீது சத்தியம் செய்யுங்கள்.. கேள்வி கேட்ட எம்.எல்.ஏவுக்கு சவால் விடுத்த அமைச்சர்.. பின்வாங்கிய எம்.எல்.ஏ..!

அடுத்த கட்டுரையில்
Show comments