Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் முதல்வர் வீட்டில் சிபிஐ சோதனை - முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

Webdunia
ஞாயிறு, 4 செப்டம்பர் 2016 (12:02 IST)
ஹரியானா மாநில முன்னாள் முதல்வர் ஹூடா மற்றும் அம்மாநிலத்தைச் சேர்ந்த 19 உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
 

 
கடந்த 2004ஆம் ஆண்டு ஹரியானாவின் குர்கான் மாவட்டத்திலுள்ள மானேசர், நவ்ரங்பூர் மற்றும் லாக்நவ்லா கிராமங்களில் சுமார் 400 ஏக்கர் நிலம் விவசாயிகளிடமிருந்து மிரட்டி பறிக்கப்பட்டது.
 
1500 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த நிலங்களை, கட்டடங்களை கட்டி விற்கும் தனியார் பில்டிங் முதலாளிகளும், அரசு அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து அபகரித்தனர். அரசு அதிகாரத்தையும், அரசு இயந்திரத்தையும் முறைகேடாகப் பயன்படுத்தி விவசாய நிலங்கள் பறிக்கப்பட்டது. இது தொடர்பாக, சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.
 

 
இந்நிலையில், வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் முதல்வர் ஹூடா மற்றும் 19 அரசு உயர் அதிகாரிகளின் வீடுகளில் சிபிஐ அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பலாப்பழம் சாப்பிட்டாதை மது அருந்தியதாக காட்டிய மிஷின்.. 3 டிரைவர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்..!

ஒரே நாளில் 11 பேரை தெரு நாய்.. பாராளுமன்றத்தில் கவனத்தை கொண்டு வந்த கார்த்தி சிதம்பரம்..!

10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல்.. பிரமாண்ட ஏற்பாடு செய்யும் தவெக..!

ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை.. கனமழையால் படகில் செல்லும் டெல்லி மக்கள்.. ஆம் ஆத்மி கிண்டல்..!

பொய் சொன்னாள்.. கொன்று விட்டேன்.. லிவ் இன் பார்ட்னரை கொலை செய்த வாலிபர்.. குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments