Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது..! கர்நாடகா மீண்டும் பிடிவாதம்..!!

Senthil Velan
வியாழன், 4 ஏப்ரல் 2024 (16:40 IST)
தமிழ்நாடு அரசு திறக்க கோரிய 3.6 டிஎம்சி நீரை தர முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் எல்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில், நதிநீர் பங்கீடு, நிலுவை நீர், அணை தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தண்ணீரை தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ALSO READ: செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. 31வது முறையாக நீட்டித்து உத்தரவு..!!
 
பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தர முடியாது  என்றும் நீர் இருப்பு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை திருமலை நாயக்கர் மகால் தூணை தொட்டால் அபராதம்.. அதிரடி அறிவிப்பு..!

ராஜ்யசபா தேர்தலில் அதிமுக வேட்பாளருக்கு பாஜக ஆதரவு.. உறுதியாகிறது கூட்டணி..!

இன்று தவெக பொதுக்குழு.. சரியாக 9 மணிக்கு வருகை தந்த விஜய்..!

வருங்கால முதலமைச்சர் புஸ்ஸி ஆனந்த்.. அப்ப விஜய் நிலைமை? - தவெகவினர் போஸ்டரால் பரபரப்பு!

இன்று முதல் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு.. 4858 பறக்கும் படைகள் தயார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments