Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்திற்கு காவிரி நீர் திறக்க முடியாது..! கர்நாடகா மீண்டும் பிடிவாதம்..!!

Senthil Velan
வியாழன், 4 ஏப்ரல் 2024 (16:40 IST)
தமிழ்நாடு அரசு திறக்க கோரிய 3.6 டிஎம்சி நீரை தர முடியாது என்று கர்நாடகா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
 
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 29வது கூட்டம் எல்.கே.ஹல்தார் தலைமையில் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகா, புதுவை மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களின் அதிகாரிகள் கலந்து கொண்டனர். 
 
கூட்டத்தில், நதிநீர் பங்கீடு, நிலுவை நீர், அணை தொடர்பான விவகாரங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 
பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தண்ணீரை தடையின்றி திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழக அதிகாரிகள் கூட்டத்தில் வலியுறுத்தினர்.

ALSO READ: செந்தில் பாலாஜியின் காவல் நீட்டிப்பு.. 31வது முறையாக நீட்டித்து உத்தரவு..!!
 
பெங்களூரு நகரில் குடிநீர் பிரச்சினை இருப்பதால், கூடுதல் தண்ணீர் தேவைப்படுவதால் தண்ணீர் தர முடியாது  என்றும் நீர் இருப்பு, சூழ்நிலையை கருத்தில் கொண்டு மட்டுமே தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியும் என்றும் கர்நாடகா அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து!

புரட்டாசி மாதம் இரண்டாம் சனிக்கிழமை- திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்த பக்தர்கள்....

தமிழக மீனவர்களுக்காக குரல் கொடுத்த ராகுல்.! மத்திய அமைச்சருக்கு கடிதம்.!!

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments