Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரியின் குறுக்கே அணை கட்ட ரூ.25 கோடி: கர்நாடக பட்ஜெட்டில் அறிவிப்பு

Webdunia
சனி, 14 மார்ச் 2015 (11:08 IST)
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட ரூ.25 கோடி ஒதுக்கீடு செய்த கர்நாடக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகதாது, ராசிமணல் ஆகிய 2 இடங்களில் அணை கட்ட திட்டமிட்டது. இதற்கு தமிழக அரசு சார்பிலும், தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகள் சார்பிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  
 
மேலும், விவசாயிகள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
 
இந்நிலையில் கர்நாடக பட்ஜெட்டில் மேகதாதுவில் அணை கட்ட ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கர்நாடக சட்டசபையில் முதலமைச்சர் சித்தராமையா நேற்று 2015-16 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
 
அந்த பட்ஜெட்டில் இது குறித்து கூறியிருப்பதாவது:- 
 
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைகள் கட்டுவதற்கான திட்ட வரைவு அறிக்கை தயாரிக்க இந்த ஆண்டு ரூ.25 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. 23 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாபர் சாதிக்கின் மனைவியிடம் அமலாக்கத்துறை விசாரணை! பெரும் பரபரப்பு..!

பாஜகவை வீழ்த்த இது ஒன்று தான் வழி.. 5 கட்ட தேர்தல் முடிந்தபின் கூறும் பிரசாந்த் கிஷோர்..!

அண்ணாமலை போல் அரசியல் செய்யவே ‘காமராஜர் ஆட்சி’.. செல்வப்பெருந்தகை திட்டம்..!

சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை.! கேரளாவுக்கு சீமான் கண்டனம்.!!

மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணி.! சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியது தமிழக அரசு..!!

Show comments