Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாண்டவர்கள் யார்? சிக்கலில் ராம் கோபால் வர்மா!!

Webdunia
செவ்வாய், 28 ஜூன் 2022 (12:41 IST)
ராம்கோபால் வர்மா மீது ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

 
பாஜகவின் ஜனாதிபதி வேட்பாளரான திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்ட நிலையில்  திரெளபதி ஜனாதிபதி என்றால் பாண்டவர்கள் யார்? என்றும் முக்கியமாக கெளரவர்கள் யார் என்றும் ராம் கோபால் வர்மா குறிப்பிட்டிருந்தார். ராம் கோபால் வர்மாவின் இந்த டுவிட்  ஜனாதிபதி வேட்பாளரை இழிவு படுத்துவதாக கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெலுங்கானா பாஜகவினர் காவல்துறையில் புகார் அளித்தனர்.  
 
இந்நிலையில் தான் திரெளபதியை இழிவுபடுத்தவில்லை என ராம் கோபால் வர்மா மறுப்பு தெரிவித்தார். இதனிடையே லக்னோவின் ஹஸ்ரத்கஞ்ச் கோல்வாலியில் மனோஜ் சின்ஹா என்பவர் வர்மாவுக்கு எதிராக புகாரளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில், உ.பி. போலீசார், திரெளபதி முர்மா தொடர்பான ட்வீட்டுக்காக ராம்கோபால் வர்மா மீது ஐடி சட்டம் உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments