Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காவிரி விவகாரத்தில் பிரபல நடிகர்களுக்கு ஆப்பு!

Webdunia
ஞாயிறு, 18 செப்டம்பர் 2016 (14:10 IST)
காவிரி பிரச்சினை காரணமாக கர்நாடக மாநிலம் மாண்டியாவில் கடந்த 9ம் தேதி விவசாயிகள் பொதுக்கூட்டம் நடந்தது.



 
இதில், கன்னட நடிகர்கள் புனித் ராஜ்குமார், உபேந்திரா மற்றும் தர்ஷன் ஆகியோர், தமிழர்களுக்கு ஏதிராக வன்முறையை தூண்டும் வகையில் பேசியுள்ளனர். அவர்களது பேச்சு இந்திய ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் இருந்துள்ளது. இதனால் கர்நாடக மாநிலம் முழுவதும் கலகம் ஏற்பட்டது.

இதில் தமிழர்கள் தாக்கப்பட்டனர். தமிழக லாரிகள், பஸ்கள் மற்றும் வாகனங்கள் தீவைத்துக் கொளுத்தப்பட்டன. அதனால், கோவையை சேர்ந்த இளங்கோவன் என்ற வழக்கறிஞர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர்கள் மீது புகார் மனு அளித்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக பொதுக்கூட்டத்தில் பேசிய மூன்று கன்னட நடிகர்களின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோ ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் அவர் சமர்பித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை அடுத்த மாதம் 3 ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

யூ டியூப் சேனல்' தொடங்க பயிற்சி வகுப்பு: தமிழக அரசு அறிவிப்பு..!

சென்னை மெரினா விமான சாகச நிகழ்ச்சி: கூட்ட நெரிசலில் சிக்கி 20 பேர் மயக்கம்..!

விஜய் மாநாட்டிற்கு புதுவை முதல்வருக்கு அழைப்பா? என்ன சொல்கிறார் ரங்கசாமி?

வன்னியர்களுக்கு சமூகநீதி வழங்காமல் ஏமாற்ற நினைத்தால்? திமுக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை

ஆன்லைன் டிரேடிங்கில் ஒரு கோடி ரூபாய் இழப்பு… சென்னை இளைஞர் தற்கொலை!

அடுத்த கட்டுரையில்
Show comments