Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிப் தட்டுப்பாட்டில் சிக்கிய கார் நிறுவனங்கள்! - லட்சக்கணக்கான கார் உற்பத்தி தேக்கம்!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (11:01 IST)
இந்தியாவில் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் செயல்பட்டு வரும் நிலையில் சமீபகாலமாக ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு காரணமாக கார்கள் உற்பத்தி தேக்கம் அடைந்துள்ளது.
இந்தியாவில் பிரபல கார் நிறுவனங்களான மஹிந்திரா, சுசுகி, ஹூண்டாய் உள்ளிட்ட பல கார் நிறுவனங்கள் கார் தயாரிப்பு தொழிற்சாலைகள் மூலம் கார்களை தயாரித்து வருகின்றன. ஆண்டுதோறும் லட்சக்கணக்கான கார்கள் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில் சமீப காலமாக ஏற்பட்டுள்ள சிப் தட்டுப்பாடு காரணமாக இந்தியாவில் கார் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. சிப் தட்டுப்பாட்டால் மாருதி நிறுவனம் சுமார் 3.40 லட்சம் கார்களை உற்பத்தி செய்யும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் நிறுவனங்களிலும் 3 லட்சம் கார்கள் உற்பத்தி பணிகளில் தேக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தட்டுப்பாடு குறைந்து கார் உற்பத்தி பணிகள் முழுமையாக முடிய சுமார் 2 முதல் 9 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படலாம் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய அணிக்கு நாடாளுமன்றத்தில் வாழ்த்து..! இந்தியா- இந்தியா என முழக்கமிட்ட எம்பிக்கள்..!!

டெட்ரா பாக்கெட்டுகளில் 90 மி.லி. மது விற்க திட்டமா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்..!

செந்தில் பாலாஜி தரப்பில் மீண்டும் புதிதாக 3 மனுக்கள் தாக்கல்.. என்ன கோரிக்கை?

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்..! ஊரக வளர்ச்சி துறைக்கு மாற்றப்பட்ட ககன்தீப் சிங் பேடி..!!

கள்ளக்குறிச்சி விஷச்சாராய வழக்கு..! 11 பேருக்கு 3 நாட்கள் சிபிசிஐடி காவல்.!!

அடுத்த கட்டுரையில்
Show comments