Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வாயை மூடு இல்லையென்றால் கற்பழித்து விடுவேன்

Webdunia
வியாழன், 7 ஜூலை 2016 (15:57 IST)
மேற்கு வங்காளத்தில் வாடகை கார் ஓட்டுநர் ஒருவர் கற்பழித்து விடுவேன் என்று மிரட்டியதை அடுத்து காரில் பயணம் செய்த இளம்பெண் ஒருவர் ஓடும் காரில் இருந்து வெளியே குதித்து தப்பியுள்ளார்.


 

 
மேற்கு வங்காளம் சால்ட் லேக் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவரது நண்பருடன் கடந்த திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் வாடகை கார் ஒன்றை பதிவு செய்து அதில் பயணித்துள்ளார். அந்த பெண்ணின் நண்பர் அவரது இடத்தில் இறங்கி விட அந்த இளம்பெண் மட்டும் தனியாக பயணித்துள்ளார்.
 
அப்போது அந்த கார் ஓட்டுநர் வேகமாக காரை ஓட்டியதுடன் பிராதான சாலையை விட்டு ஆள் நடமாட்டம் இல்லாத சாலையில் சென்றுள்ளார். சுதாரித்து கொண்ட இளம் பெண் கார் ஓட்டினரிடம் பிராதான சாலையில் செல்லுமாறு கூறியுள்ளார்.
 
பின்னர் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஓட்டுநர் அந்த பெண்ணிடம், இனி சத்தம் போட்டால் கற்பழித்து விடுவேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து அந்த பெண் இறங்க வேண்டிய இடத்தை தாண்டி கார் சென்றுள்ளது. உடனே அந்த பெண் பயந்து போய் ஓடும் காரில் இருந்து குதித்து தப்பி விட்டார்.
 
அதைத்தொடர்ந்து மறுநாள் அந்த பெண் காவல்துறையில் புகார் அளித்தன் பேரில் அந்த வாடகை கார் ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.
 
  
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

நடுவானில் இயந்திரக்கோளாறு..! அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்..!!

இன்று மாலை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது..! காங்கிரஸுக்கு அமைச்சர் நிதின் கட்கரி பதிலடி..!!

வங்கக்கடலில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி.! தமிழகத்தில் 3 நாட்களுக்கு ரெட் அலர்ட்..!!

100 நாள் திட்ட பணியாளர்களுக்கு ஊதியம் உயர்வு..! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு...!!

அடுத்த கட்டுரையில்
Show comments