Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹெல்மெட் அணியாமல் காரில் பயணமா?- பாஜக பிரமுகருக்கு அபராதம் விதித்த போலீஸார்

Webdunia
செவ்வாய், 1 மார்ச் 2016 (11:41 IST)
காரில் ஹல்மெட் போடாமல் அமர்ந்திருந்ததாக டிரைவருக்கு பெங்களூர் போலீஸார் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 


பெங்களூரு மல்லேசுவரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். பாஜக பிரமுகரான இவருக்கு நேற்று முன் தினம் பெங்களூரு போக்குவரத்து போலீசாரிடம் இருந்து அபராத ரசீது ஒன்று வந்தது. அதனைக் கண்ட அவர் அதிர்ச்சி அடைந்தார். காரணம் அதில் குறிப்பிடப்பட்டிருந்த விஷயம்தான். அந்த அபராத ரசீதில்  அவருடைய காரின் பதிவு எண் குறிப்பிடப்பட்டு,  கடந்த 4ம் தேதி பசவேசுரா சர்க்கிளில் இந்த வாகனம் சென்ற போது, அதன் பின் இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் ஹெல்மெட் அணியவில்லை என்றும், அதனால் ரூ. 100க்கு இந்த அபராத ரசீது அனுப்பப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுகுறித்து உடனடியாக மாநகர போக்குவரத்து போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்தார். இந்த சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பெங்களூரு மாநகர போக்குவரத்து உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘எந்திர கோளாறு காரணமாக இந்த தவறு நடந்துள்ளது. வருங்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடக்காது என்றார்.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சரிவு.. இன்று ஒரே நாளில் இவ்வளவா?

தயிர் வியாபாரியிடம் பணம் பறித்த விவகாரம்: சிறப்பு உதவி ஆய்வாளர் கைது..!

முத்தலாக்கில் இருந்து விடிவுகாலம் பிறந்திருக்கிறது.. தமிழிசை சௌந்தராஜன் பேட்டி

அடுத்த 3 மணி நேரத்தில் எத்தனை மாவட்டங்களில் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

மழை பெய்வதால் மின் தேவை குறைந்துள்ளது.. மின்சார துறை தகவல்..!

Show comments