Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் பிடிபட்டார்

Webdunia
புதன், 5 ஆகஸ்ட் 2015 (18:53 IST)
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இன்று காலை 05-08-16 (புதன்கிழமை) தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உத்தம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
 

 
இதற்கு பதிலடி கொடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து, தொடர்ந்து நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

Show comments