Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் பிடிபட்டார்

காஷ்மீரில் தாக்குதல்: தீவிரவாதிகளில் ஒருவர் பிடிபட்டார்
, புதன், 5 ஆகஸ்ட் 2015 (18:53 IST)
காஷ்மீர் மாநிலம் உத்தம்பூரில் இன்று காலை 05-08-16 (புதன்கிழமை) தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

 
காஷ்மீர் மாநிலத்தில் உள்ள உத்தம்பூர் தேசிய நெடுஞ்சாலையில் எல்லைப் பாதுகாப்புப்படை வீரர்கள் சென்ற வாகனத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த இரண்டு பேர் மரணம் அடைந்தனர். 8 பேர் காயமடைந்தனர்.
 
webdunia

 
இதற்கு பதிலடி கொடுத்து, பாதுகாப்பு வீரர்கள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். மற்றொருவர் அருகில் இருந்த பள்ளிக்கூடத்துக்குள் புகுந்து அங்கிருந்த 3 பேரை பிணைக்கைதிகளாக சிறைபிடித்தார். அப்பகுதியை ராணுவத்தினர் சுற்றிவளைத்து, தொடர்ந்து நடத்திய தாக்குதலில், தீவிரவாதி ஒருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil