Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத வேட்பாளர்கள்..! 27 பேர் தகுதி நீக்கம்..!!

Senthil Velan
சனி, 16 மார்ச் 2024 (18:34 IST)
தமிழ்நாட்டில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
 
மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
 
மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் கணக்குகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள்.

ALSO READ: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா..! 3-வது முறையாக ஆட்சி அமைப்போம்.! பிரதமர் மோடி..!!
 
அதன்படி, 2021 முதல் 2024 மார்ச் 15-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பி வைத்துள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர்கள் பட்டியலை அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளும் கையில் வைத்திருக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் கட்-அவுட் சரிந்து விபத்து.. ஒருவர் காயம்..!

3 கோடி ஸ்மார்ட் மீட்டர்கள் கொள்முதல்.. டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு..!

ஃபாரீன் சரக்கு! 150 சதவீத வரி! இந்தியா நம்மள நல்லா ஏமாத்துறாங்க! - அமெரிக்கா ஆவேசம்!

டெஸ்லா கார் வாங்குங்க.. சிட்டா பறங்க! - எலான் மஸ்க்கின் விளம்பர தூதராக மாறிய ட்ரம்ப்!

ஆட்சிக்கு வந்ததும் முஸ்லிம் எம்.எல்.ஏக்களை சட்டசபையில் இருந்து வெளியேற்றுவோம்: பாஜக

அடுத்த கட்டுரையில்
Show comments