Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கஃபே காபிடே உரிமையாளர் மாயம் – தற்கொலையா ?

Webdunia
செவ்வாய், 30 ஜூலை 2019 (13:13 IST)
பிரபலமான கஃபே காபி கடையின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தா திடீரென நேற்றிரவில் இருந்து காணாமல் போயுள்ளார்.

இந்தியாவின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான கஃபே காபி கடையின் உரிமையாளரான வி.ஜி.சித்தார்த்தா திடீரென மாயமாகியுள்ளார். இவர் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் மருமகன் ஆவார்.

நேற்று இரவு மங்களூருவுக்கு அருகிலுள்ள நேத்ராவதி நத்திக்கு அருகில் காரில் சென்று கொண்டிருந்தபோது காரில் இருந்து இறங்கி வாக்கிங் சென்றுவருவதாகக் கூறி சென்ற இவர் மீண்டும் திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து அவரது மொபைல் எண்ணும் அனைத்து வைக்கப்பட்டதால் சந்தேகம் அதிகமாகியதை அடுத்து போலிஸில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சித்தார்த்தா தனது நிறுவனத்தின் இயக்குனருக்கு எழுதிய கடிதம் கிடைத்துள்ளது. அதில் தனது தொழிலை தன்னால் லாபகரமனதாக நடத்த முடியவில்லை என்றும் தன் மேல் நம்பிக்கை வைத்தவர்களுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவர் நதியில் விழுந்து தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனப் போலிஸ் சந்தேகித்துள்ளது. இதையடுத்து அவரைத் தேடும் பணியில் முடுக்கிவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

அடுத்த கட்டுரையில்
Show comments