Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எல்லாம் சரி இருந்தாலும் ஏன் இப்படி? பாஜக எம்பியின் காலை கழுவி நீரை குடித்த தொண்டர்

Webdunia
திங்கள், 17 செப்டம்பர் 2018 (19:21 IST)
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் தொண்டர் ஒருவர் பாஜக எம்பி நிஷிகந்த் துபேவின் காலை கழுவி அந்த நீரை குடித்து, தலையில் தெளித்துக்கொண்டே சம்பவம் நிகழ்ந்துள்ளது.

 
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டாவில் கான்பாரி மற்றும் காலாளி கிராமங்களுக்கு இடையே ஓடும் தஜியா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்பட்டது. இந்த பாலம் அப்பகுதி மக்களுக்கு பெரிய அளிவில் உதவியாகவும், வசதியாகவும் இருந்தது.
 
இந்த பாலத்தை கட்டுவதற்கு அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த பாலத்தின் திறப்பு விழா இன்று நடைபெற்றுள்ளது.
 
இதனை முன்னிட்டு திறப்பு விழாவில் கோட்டா தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்.பி நிஷிகந்த் துபே கலந்துக்கொண்டார். அப்போது பாஜக தொண்டர் ஒருவர் அவரது காலை கழுவி, அந்த நீரை குடித்து தலையில் தெளித்துக்கொண்டார்.
 
மேலும் இதுகுறித்து அந்த தொண்டர், கிராமத்தின் நீண்ட கால கோரிக்கையான இந்த பாலத்தை கட்டி தரப்பட்டதால் இதுபோன்று நன்றிக்கடனை செலுத்தினேன் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments