Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இனிமேல் தியேட்டர், வணிக வளாகங்கள் 24 மணி நேரமும் இயங்கும் : மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Webdunia
புதன், 29 ஜூன் 2016 (19:09 IST)
சினிமா திரையரங்குகள், வணிக வளாகங்கள் மற்றும் கடைகள் ஆகியவை 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளிக்கும் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.


 

 
இந்த நவீன திட்டம் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர் துறை அமைச்சகத்தின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ளது. 
 
டெல்லியில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் ஆலோசிக்கப்பட்டு இறுதியில் புதிய சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்பை பெறமுடியும் மற்றும் பெண்களும் இரவு நேரங்களில் பணிபுரிய வழிவகை செய்யப்படுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த புதிய சட்டத்திற்கு பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை. எனவே,  இந்த சட்டம் நேரடியாக அமலுக்கு வர உள்ளது.  அதன் அடிப்படையில் ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை செயல்படும். இந்த சட்டம் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று பாஜகவில் இருந்து விலகிய நடிகை இன்று தவெகவில்.. ஏன் என விளக்கம்..!

மாநிலங்களவை எம்பி ஆகிறார் அரவிந்த் கெஜ்ரிவால்.. ஆம் ஆத்மி அதிரடி முடிவு..!

வயிற்றில் வளர்ந்த 2 கால்கள்.. சிறுவனுக்கு அறுவை சிகிச்சை செய்த எய்ம்ஸ் மருத்துவர்கள்..!

செவ்வாய் கிரகத்தில் கடற்கரை.. 300 கோடி ஆண்டுகள் பழமையானது என தகவல்..!

மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி கொலை செய்த மருமகன்.. கடும் தீக்காயத்தால் மருத்துவமனையில் அனுமதி..!

அடுத்த கட்டுரையில்
Show comments