Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்டேட் வங்கியுடன் இணைகிறது 5 வங்கிகள். மத்திய மந்திரிசபை ஒப்புதல்

Webdunia
வியாழன், 16 பிப்ரவரி 2017 (05:41 IST)
இந்தியாவின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கியுடன்ஸ்டேட் பாங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பாங்க் ஆப் பாடியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத் ஆகிய வங்கிகள் இணைகிறது. இதுவரை ஸ்டேட் வங்கியின் கிளை வங்கிகளாக இருந்த இந்த வங்கிகளை இணைக்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.



இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, இந்த இணைப்பின் மூலம் ஸ்டேங் வங்கி ஆக்கப்பூர்வாக செயல்படும் என்றும், ஸ்டேட்  வங்கியுடன் கிளை வங்கிகள் இணைவதால் அதன் கிளைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என்றும் கூறியுள்ளார்.

நாடு முழுவதும் ஸ்டேட் வங்கிக்கு 16,500 கிளைகள் உள்ளன. இதில் 191 கிளைகள் வெளிநாடுகளில் உள்ளன. இந்த நிலையில் மேற்கண்ட ஐந்து வங்கிகள் இணைப்பு மூலம் ஸ்டேட் வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை 22,500 ஆக உயரும். அதேபோல் இந்த வங்கியின் ஏடிஎம்-களின் எண்ணிக்கை 58 ஆயிரமாக அதிகரிக்கும். இது ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வசதியாக அமையும்

நாடாளுமன்றமா குத்துச்சண்டை மைதானமா? எகிறி அடித்த எம்.பிக்கள்! – நம்ம ஊர் இல்ல.. தைவான் நாடாளுமன்றம்!

தந்தையை இழந்து மனநலம் பாதிக்கப்பட்ட இளைஞர் தினசரி மருத்துவமனைக்கு சென்று, தனக்கு மருந்து கொடுத்து கொன்றுவிடுமாறு, மருத்துவமனை ஊழியர்களிடம் தொல்லை!

பெண் காவலர்களை அவதூறாக பேசிய வழக்கில் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டை மே 31ஆம் தேதி வரை சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள்.. கடற்கரை - தாம்பரம் இடையிலான ரயில்கள் ரத்து..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம்: முடிவுகள் வெளியிட தடையா? உச்ச நீதிமன்றம் அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments