மேற்கு வங்காளத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும்: பாஜக அறிவிப்பு

Webdunia
ஞாயிறு, 27 நவம்பர் 2022 (14:53 IST)
மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ என்று கூறப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என பாஜக கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 மேற்கு வங்க மாநிலத்தில் வங்கதேசத்திலிருந்து முறைகேடாக வந்து தங்கியவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக கூறப்படும் நிலையில் மேற்குவங்க பாஜக தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி, ‘மேற்கு வங்க மாநிலத்தில் சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படும் என்று கூறினார்
 
முதல்வர் மம்தா பானர்ஜிக்கு துணிச்சல் இருந்தால் அதை தடுத்து பாருங்கள் என்றும் உரிய ஆவணங்களுடன் வசிக்கும் மக்கள் யாருடைய குடியுரிமையும் பாதிக்கப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார் 
 
மேற்கு வங்க மாநிலத்தில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ள நிலையில் எதிர்க்கட்சி தலைவர் இவ்வாறு கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

செங்கோட்டையன் பின்னால் இருப்பது திமுக?!... கொளுத்திப்போட்ட நயினார் நாகேந்திரன்!...

அதிமுகவை ஒன்றிணைக்க சொன்னதே பாஜகதான்!.. போட்டு உடைத்த செங்கோட்டையன்!...

நீதிமன்ற அவமதிப்பு மனு.. பதிலளிக்கத் தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

மகாராஷ்டிரா பெண் வழக்கறிஞர் பீகார் தேர்தலில் வாக்களித்தாரா? வைரல் பதிவு..!

மாதம் ரூ.4 லட்சம் ஜீவனாம்சம் போதாது.. கிரிக்கெட் வீரர் ஷமியின் மனைவி மனுதாக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments