Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்த மண்ணின் சட்டம் தான் குடியுரிமை திருத்தச் சட்டம், யாராலும் தடுக்க முடியாது: அமித்ஷா

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (11:34 IST)
குடியுரிமை சட்டம் என்பது  இந்த மண்ணின் சட்டம் என்றும் அந்த சட்டத்தை நிறைவேற்றுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார் 
 
கடந்த 2019 ஆம் ஆண்டு பாஜக அரசு இரண்டாவது முறையாக அமைக்கப்பட்டதும் குடியுரிமை திருத்த சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதுகுறித்த மசோதா கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது என்பதும் அப்போதே குடியரசு தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தாலும் இன்னும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு காரணமாக அமல்படுத்தாத முறை நிலை இருப்பதாகவும் உள்ளதுஎன்பது குறிப்பிடத்தக்கது.
 
 இந்த நிலையில்  குடியுரிமைச் சட்டத்தை நிச்சயமாக அமல்படுத்துவோம் என்று கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் மார்ச் மாதத்திற்குள் குடியுரிமைச் சட்டம் இறுதி வரைவு நடைமுறைக்கு வரும் என்றும்  தெரிவித்தார். 
நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருக்கும் நிலையில் அதற்கு முன்பாகவே குடியுரிமைச் சட்டம் அமலுக்கு வர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: 3 பேருக்கு நீதிமன்ற காவல்.. மொத்தம் 11 பேர் கைது..!

தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. ஆனால் வெள்ளி விலை உயர்வு.. சென்னை நிலவரம் என்ன?

மும்பையில் புறநகர் ரயில்சேவை திடீர் நிறுத்தம்.. பயணிகள் அவதி.. என்ன காரணம்?

கள்ளக்காதலியுடன் உல்லாசம்; கணவனின் லீலைகளை வீடியோ எடுத்த மனைவிக்கு கணவன் கொடுத்த தண்டனை!

2026ல் ஆட்சியமைக்க வேண்டுமென்றால் அதிமுக தலைமை மாற்றப்பட வேண்டும்: ஓபிஎஸ் ஆவேசம்

அடுத்த கட்டுரையில்
Show comments