Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஏஏ சட்டம்- எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல்- உள்துறை அமைச்சர் அமித்ஷா

Sinoj
வியாழன், 14 மார்ச் 2024 (14:50 IST)
சிஏஏ சட்டம்  பற்றி எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  விமர்சித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு   நாடு முழுவதும் சிஏஏ சட்டம் அமலுக்கு வருவதாக அறிவித்தது. பாஜக அரசு அறிவித்தபடி,   நேற்று முன்தினம் சிஏஏ சட்டம் அரசிதழில் வெளியானதாக அறிக்கை வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.
 
இதற்கு காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தமிழக வெற்றிக் கழகம், புரட்சி பாரதம், விசிக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
 
 மத்திய பாஜக அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம்  இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. தமிழ் நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் வராது என்று     முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.
 
இந்த நிலையில் சிஏஏ சட்டம்  பற்றி எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கி அரசியல் செய்வதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  விமர்சித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் கூறியதாவது:
 
குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறுத்தும் அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை 
 
ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், பினராயி விஜயன் வாக்கு வங்கி அரசியலுக்காக பொய் பிரசாரம் செய்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருமணத்திற்கு என்னை ஏன் அழைக்கவில்லை.. துப்பாக்கியால் சுட்ட பக்கத்து வீட்டுக்காரர்..!

மறுமணம் செய்த பெண் ஊழியருக்கு மகப்பேறு விடுப்பு கிடையாதா? ஐகோர்ட் கண்டனம்..!

தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழை.. அதேசமயம் வெயிலும் கொளுத்தும்: வானிலை அறிவிப்பு..!

தெலுங்கானாவில் இருந்து குமரிக்கு திருவண்ணாமலை வழியாக சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு..!

வட இந்தியர்கள் பன்னிக்குட்டி போல் குழந்தைகள் பெற்றுள்ளனர்.. அமைச்சர் கருத்துக்கு அண்ணாமலை கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments