மேகாலயா மாநிலத்தில் மலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ஒரு பேருந்து 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 30 பேர் வரை உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேகலாயா மாநிலம் சில்சாரில் இருந்து அஸ்ஸாமின் கவுகாத்தி நோக்கி ஒரு பயணிகள் பேருந்து நேற்று சென்று கொண்டிருந்தது. மேகலாயாவின் தெற்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது, இரவு 10 மணியளவில் அந்த பேருந்து, ஓட்டுனரின் கட்டுப்பாட்டிலிருந்து விலகி, சுமார் 300 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது.
இதுபற்றி உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. மீட்பு குழுவினரும் வரவழைக்கப்பட்டார்கள். அவர்கள், உயிரிழந்தவர்களின் உடலை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், படுகாயமடைந்த 8 பேரையும் மீட்டுள்ளனர்.
இந்த விபத்து எப்படி ஏற்பட்டது என்று தெரியவில்லை. இதுபற்றி விசாரணை செய்து வருவதாக அந்த மாவட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளார்.