சபரிமலை சென்ற தமிழக பேருந்து விபத்து: ஒருவர் பலி, 17 பேர் காயம்!

Webdunia
செவ்வாய், 31 டிசம்பர் 2019 (08:57 IST)
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலைள ஐயப்பன் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று கொண்டிருக்கின்றனர். குறிப்பாக மகரவிளக்கு பூஜையை காண அதிகளவில் பக்தர்கள் சென்றவண்ணம் உள்ளனர்.
 
இந்த நிலையில் திருப்பூரில் இருந்து நேற்று ஐயப்ப பக்தர்கள் சிலர் பேருந்து மூலம் சபரிமலைக்கு சென்றிருந்தனர். இவர்களது பேருந்து எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூர் அருகே இன்று அதிகாலை 3 மணியளவில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராத வகையில் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் ஐயப்ப பக்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். அவர் திருப்பூரை சேர்ந்த தர்மலிங்கம் என்று கூறப்படுகிறது
 
மேலும் பேருந்தில் சென்ற 17 ஐயப்ப பக்தர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளதாகவும் இதில் ஒரு பக்தரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த எர்ணாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஐயப்ப பக்தர்கள் சென்ற பேருந்து விபத்தில் சிக்கி, அதில் ஒரு பக்தர் பலியாகியுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பீகார் தேர்தல்: பிரசாந்த் கிஷோர் அறிவித்த வேட்பாளர் பட்டியலில் கணித மேதை, வழக்கறிஞர், மருத்துவர்..!

இது கூட்டணிக்கான பிள்ளையார் சுழி என்று பேசிய ஈபிஎஸ்.. மறுப்பு தெரிவித்த தவெக..!

விஜய் மீண்டும் கரூருக்கு சென்றால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம்: நயினார் நாகேந்திரன்..!

உலக நாடுகளை உலுக்கிய இருமல் மருந்து விவகாரம்! விளக்கம் கேட்ட உலக சுகாதார அமைப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments