Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நர்மதை நதியில் பஸ் கவிழ்ந்து விபத்து.. 13 பேர் பலி! – மத்திய பிரதேசத்தில் பரபரப்பு!

Webdunia
திங்கள், 18 ஜூலை 2022 (13:34 IST)
மத்திய பிரதேசத்தில் இந்தூரில் இருந்து புனேவுக்கு சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தின் இந்தூரில் இருந்து மகாராஷ்டிராவின் புனேவுக்கு பேருந்து ஒன்று இன்று காலையில் பயணித்துள்ளது. தார் மாவட்டம் கல்கோட்டில் சென்று கொண்டிருந்தபோது பேருந்து நர்மதை ஆற்றில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஆற்றில் கவிழ்ந்த பேருந்தில் பயணிகள் பலர் சிக்கியிருந்த நிலையில் அங்கிருந்த மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். ஆனாலும் ஆற்றில் மூழ்கி 13 பேர் உயிரிழந்துள்ளனர். 10 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் மற்றவர்கள் உடல்களை தேடும் பணி தொடர்கிறது. இதுவரை 15 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆகாஷ் பாஸ்கரன் மீதான வழக்கு: அமலாக்கத்துறைக்கு ரூ.30,000 அபராதம்..!

மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற மருமகன்.. உருட்டுக்கட்டையால் அடித்து கொலை..!

ரூ.1140 கோடி திட்டத்திற்கு தூதராகும் சச்சின் டெண்டுல்கர் மகள்.. குவியும் வாழ்த்துக்கள்..!

உண்மையான இந்தியர் விவகாரம்.. பிரியங்கா காந்தி மீது வழக்கு தொடர பாஜக திட்டம்?

சீனா செல்கிறார் பிரதமர் மோடி.. டிரம்புக்கு ஆப்பு வைக்க இரு நாடுகளும் திட்டமா?

அடுத்த கட்டுரையில்
Show comments