Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பஸ் ஓட்டும்போது திடீர் நெஞ்சுவலி.. பயணிகளை பாதுகாப்பாக இறக்கியவுடன் மரணம் அடைந்த டிரைவர்..!

Webdunia
செவ்வாய், 11 ஏப்ரல் 2023 (16:30 IST)
பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்ததை அடுத்து அவர் நெஞ்சுவலியுடன் பாதுகாப்பாக பேருந்து உரிய இடத்தில் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டவுடன் உயிரிழந்த சம்பவம் வெறும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
குஜராத் மாநில அரசு போக்குவரத்துக் கழக டிரைவராக பணிபுரிந்து வருபவர் பர்மால் அஹிர். நாற்பது வயதான இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை இரவு எட்டரை மணி அளவில் பஸ்சை எடுத்து உள்ளார். அந்த பஸ்ஸில் உள்ள அனைவரையும் ராதன்பூர் நகரில் அவர் இறக்கி விட வேண்டும் என்ற நிலையில் திடீரென பேருந்து ஓட்டிக் கொண்டிருந்தபோதே அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. 
 
இதனை அடுத்து அவர் வேறு எங்கு வண்டியை நிறுத்தாமல் நெஞ்சுவலி பொறுத்துக் கொண்டே உரிய இடத்திற்கு வந்தவுடன் பாதுகாப்பாக பயணிகளை இறக்கினார். அதன் பிறகு அவர் அவர் சில நிமிடங்களில் சீட்டிலேயே சரிந்து விழுந்து விட்டார். இதனை கவனித்த கண்டக்டர் மற்றும் பயணிகள் அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டார் என்று டாக்டர்கள் கூறினர். 
 
கடும் நெஞ்சுவலியையும் பொறுப்பெடுத்தாமல் பயணிகளை பாதுகாப்பாக உரிய இடத்தில் இறக்கி விட்டு விட்டு அதன் பின் உயிரிழந்த அவரது செயல் காரணமாக பயணிகள் சோகமடைந்துள்ளனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஷச்சாராய விவகாரத்தில் அமைச்சர் முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும்.. பிரேமலதா ஆவேசம்..!

இறைவனிடம் வரம் கேளுங்கள்.. வாக்கு கேட்காதீர்கள்: அமைச்சர் சேகர்பாபு..!

முதல்முறையாக உடையாத Damage Proof armour பாடியுடன்..! - OPPO A3 Pro 5G சிறப்பம்சங்கள்!

வட்டார வளர்ச்சி அலுவலரை கண்டித்து ஒன்றிய தலைவர் உட்பட கவுன்சிலர்கள் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: சட்ட பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments