Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பல்க் மெசேஜ் சேவை வழங்கும் 120 ஐடிக்களை ப்ளாக் செய்தது மத்திய அரசு: சீனாவுடன் தொடர்பா?

Webdunia
திங்கள், 10 ஏப்ரல் 2023 (11:58 IST)
பல்க் மெசேஜ் சேவை வழங்கும் 120 ஐடிக்களை மத்திய அரசு பிளாக் செய்து உள்ள நிலையில் இந்த நிறுவனத்திற்கு சீனாவுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பும் சேவையை செய்து வரும் சில நிறுவனங்கள் சீன ஹேக்கர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதாக கூறப்பட்டதால் அவற்றை மத்திய அரசு தடை செய்துள்ளது. 
 
உள்துறை அமைச்சகம் இது குறித்து கடந்த இரண்டு மாதங்களாக கண்காணித்து வந்த நிலையில் அதன்மூலம் கிடைத்த தகவலின்படி கடந்த இரண்டு மாதங்களில் 120 ஐடிக்களை தடை செய்யப்பட்டுள்ளன. இந்த ஐடிகள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு பல்க் மெசேஜ் அனுப்பப்படுவதும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. 
 
பல்க் மெசேஜ் செல்லும் ஐபி முகவரிகள் அனைத்துமே சீனாவை சேர்ந்தவை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மேற்கு வந்த மேற்குவங்க மின்வாரியத்தின் பல்க் மெசேஜ் ஹேக்கிங் செய்யப்பட்டு அதில் வாடிக்கையாளர்களுக்கு மின் கட்டணம் நிலுவையில்  இருப்பதாகவும் அதனை உடனே செலுத்த வேண்டும் என்று புதிய லிங்க் அமைத்துக் கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ஏராளமானோர் தங்கள் பணத்தை இழந்ததாகவும் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

துரோகி என்ற வார்த்தையை வாபஸ் பெற வேண்டும்.! அண்ணாமலைக்கு ஆர்.பி உதயகுமார் எச்சரிக்கை..!!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இவர்கள்தான் உண்மையான குற்றவாளியா?... பயமா இருக்கு- அனிதா சம்பத் வெளியிட்ட வீடியோ!

ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு உளவுத்துறையின் மெத்தனப் போக்கே காரணம்: பகுஜன் சமாஜ்வாதி கட்சி

பாமக பிரமுகருக்கு சரமாரி அரிவாள் வெட்டு ..பதற்றத்தில் கடலூர் மாவட்டம்..!

ஜூலை 23-ல் மத்திய பட்ஜெட் தாக்கல்.! 7-வது முறையாக தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments