Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ:4 கோடிக்கு பேரம் பேசப்பட்ட எருமை மாடு: உரிமையாளர் விற்க மறுப்பு

Webdunia
புதன், 20 ஜூலை 2016 (13:05 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் ஹீரா என்ற எருமை மாடு ரூ:4 கோடிக்கு பேரம் பேசப்பட்டது. ஆனால் அதன் உரிமையாளர் அதை விற்க மறுத்து விட்டார்.


 

 
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்த முன்னாசிங் எனபவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். அவர் பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாடு ஒன்று உள்ளது. அந்த மாட்டுக்கு 5 வயது.
 
4 ஆண்டுகளுக்கு முன் அந்த எருமை மாட்டை அரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வந்துள்ளார். இதுவரை 2 குட்டிகளை ஈன்றுள்ளது. தினம் 15 லிட்டரில் இருந்து 31 லிட்டர் வரை பால் கறக்கிறது. 
 
இந்த எருமை மாடு வாங்கிய பின்னர்தான் முன்னாசிங்கின் பண்ணை விரிவடைந்துள்ளது, அதனால் இதை அதிர்ஷ்டமாக கருதி பலரும் இதை வாங்குவதற்கு முயற்சித்தனர். ஆனால் முன்னாசிங் இதுவரை விற்க முன்வரவில்லை.
 
இந்நிலையில் சித்தி மாவட்டத்தை சேர்ந்த ஹர்சவர்த்தன் சிங் என்ற வியாபாரி அவரிடம் சென்று மாட்டை விலைக்கு கேட்டுள்ளார். ரூ.4 கோடி வரை அவர் விலை பேசியுள்ளார். ஆனால் முன்னாசிங் மாட்டை கொடுக்க மறுத்து விட்டார்.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பிரதமருக்கு நன்றி.. திமுகவுக்கு கண்டனம்! அதிமுக செயற்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

என்னால் தான் மாபெரும் தலைவர்கள் உருவாகினர், ஆனால் மக்களுக்கு நன்மை இல்லை: பிரசாந்த் கிஷோர்

சந்திரபாபு நாயுடுவை பார்த்து நிறைய கற்று கொண்டேன்: பிரதமர் மோடி

இட ஒதுக்கீடு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய கவர்னர்: நன்றி சொன்ன காங்கிரஸ்..!

கோயம்பேடு - பட்டாபிராம் இடையே மெட்ரோ ரயில்: தமிழக அரசு ஒப்புதல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments