Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொரோனாவுக்கு அஞ்சாமல் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர்!

Webdunia
சனி, 15 ஜனவரி 2022 (08:41 IST)
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. 

 
இந்தியா முழுவதும் ஒமிக்ரான் மற்றும் டெல்டா ஆகிய இரண்டு வகை வைரஸ்கள் வேகமாக பரவ தொடங்கியுள்ள நிலையில் தினசரி பாதிப்புகள் 2 லட்சத்திற்கும் மேல் அதிகரித்துள்ளன. இதனால் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. 
 
குறிப்பாக டெல்லியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்புகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த மாதம் முதல் வாரத்திலேயே, நாடாளுமன்ற ஊழியர்கள் 400-க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
 
இருப்பினும் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31 ஆம் தேதி தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பின்னர் பிப்ரவரி 1 ஆம் தேதி 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உரையாற்றி தொடங்கி வைக்கும் கூட்டத்தொடர் பிப்ரவரி 8 ஆம் தேதி வரை நடக்கிறது.
 
மேலும் இரண்டாவது பகுதி கூட்டத்தொடர், மார்ச் 14 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறுகிறது என்பது கூடுதல் தகவல். கொரோனா உச்சத்தை எட்டிக் கொண்டிருக்கும் நிலையிலும் நாடாளுமன்றம் கூடுவது கொரோனா பரவலின் தாக்கத்தை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வேகத்தடையில் ஏறி இறங்கியபோது ஆம்புலன்ஸில் இருந்து தூக்கி வீசப்பட்ட நோயாளி: நீலகிரியில் அதிர்ச்சி சம்பவம்..!

திடீர்னு விஐபி லைன் போட்டாங்க.. ஒரே கேட் வழியே போகணும் வரணும்? - பூரி ஜெகன்நாதர் கூட்ட நெரிசல் பலி காரணம்?

போலீஸ் ஸ்டேஷன் போனா உயிரோட வர முடியாது.. திமுக ஆட்சி இப்படிதான்! - நயினார் நாகேந்திரன் கடும் விமர்சனம்!

கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருக்க இடையூறு! கணவனை மிளகாய் பொடி தூவி கொன்ற மனைவி!

கீழடியில் 2500 ஆண்டுகள் முன்பு வாழ்ந்த மக்கள் எப்படி இருந்தனர்? - மாதிரி புகைப்படம் வெளியீடு!

அடுத்த கட்டுரையில்
Show comments