Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பி.எஸ்.என்.எல். 4ஜி சேவை : மத்திய அரசு தகவல்

Webdunia
வெள்ளி, 29 ஜூலை 2022 (11:58 IST)
தமிழ்நாட்டில் 534 கிராமங்களில் பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது 
 
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் தற்போது வாடிக்கையாளர்கள் அதிகம் ஆகி கொண்டே வருகின்றனர் என்பதும் இதனை அடுத்து வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்த கிராம பகுதிகளில் 4ஜி சேவை செய்ய பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்து இருப்பதாகவும் கூறப்பட்டது.
 
இதற்கு மத்திய அமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் அளித்திருந்தது. இந்த நிலையில் நாடு முழுவதும் விரைவில் 24 ஆயிரத்து 650 கிராமங்களுக்கு பிஎஸ்என்எல் 4ஜி சேவை அளிக்கப்பட உள்ளது. அதில் தமிழ்நாட்டில் உள்ள 534 கிராமங்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

அரியலூர், செங்கல்பட்டு, கோவை, கடலூர், ஈரோடு, மதுரை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி உள்பட மொத்தம் 31 மாவட்டங்களில் உள்ள 534 கிராமங்களில் 4ஜி சேவை அளிக்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments