Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண்

Webdunia
திங்கள், 7 ஜூலை 2014 (13:09 IST)
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண், வரலாறு காணாத வகையில் 26 ஆயிரம் புள்ளிகளைத் தொட்டது.

பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியுள்ள நிலையில் இந்திய பங்குச் சந்தைகள் ஜூலை 7 அன்று காலை வர்த்தகத்தின் துவக்கத்திலேயே  புதிய உச்சத்தைத் தொட்டன.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 100 புள்ளிகள் உயர்ந்து முதன் முறையாக 26 ஆயிரம் புள்ளிகளை தொட்டது. காலை நிலவரப்படி, வர்த்தகத்தின் இடையே 26,113 வரை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

தேசிய பங்குச் சந்தை நிப்டி 30 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து 7789 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது. 

இன்றைய வர்த்தக நேர நிறைவின்போது, சென்செக்ஸ் 138 புள்ளிகள் உயர்ந்து 26,100 என்ற நிலையிலும், நிப்டி 35 புள்ளிகள் உயர்ந்து 7,787 என்ற நிலையிலும் இருந்தன.

டி.சி.எஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட ஐ.டி. துறைப் பங்குகளும் சன் பார்மா, டாக்டர் ரெட்டி  உள்ளிட்ட மருந்துத் துறைப் பங்குகளும் டாட்டா பவர் பங்குகளும் (Sun Pharma, TCS, Tata Power, Infosys, Dr Reddy's Labs) மதிப்பு உயர்ந்தன. அதே நேரம், எச்.டி.எப்.சி., ஆக்சிஸ் உள்ளிட்ட வங்கிகளும், ஓ.என்.ஜி.சி., கெய்ல், ரிலையன்ஸ் (HDFC Bank, ONGC, GAIL, Axis Bank, Reliance) உள்ளிட்ட நிறுவனங்களும் பங்கு விலைச் சரிவைச் சந்தித்தன. 

பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்பில் கடந்த வாரத்தில் மட்டும் இந்திய பங்குச் சந்தைகள் 3 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

Show comments