Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ராம்விலாஸ் பஸ்வான் கட்சி பிரமுகர், மனைவியுடன் சுட்டுக் கொலை

லோக் ஜனசக்தி கட்சி பிரமுகர், மனைவியுடன் சுட்டுக் கொலை

ராம்விலாஸ் பஸ்வான் கட்சி பிரமுகர், மனைவியுடன் சுட்டுக் கொலை
, சனி, 6 பிப்ரவரி 2016 (08:00 IST)
பீகாரில் ராம்விலாஸ் பஸ்வான் கட்சியான லோக் ஜனசக்தியின் பிரமுகர் பிரிஜ்நாதி சிங் மனைவியுடன் சரமாரியாக சுட்டுக் கொல்லப்பட்டார்.


 

 
மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியைச் சேர்ந்தவர் பிரிஜ்நாதி சிங்.
 
இவர் நேற்று தன் மனைவியுடன் பாட்னா மாவட்டம் கச்சி தர்கா அருகே காரில் சென்று கொண்டிருந்தார்.
 
அப்போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர், அந்த வாகனத்தை வழிமறித்து, AK 47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.
 
இந்த துப்பாக்கி சூடு சம்பத்தால், பிரிஜ்நாதி சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடைய மனைவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படார் ஆனால், அவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
காரில் சென்ற மற்றொருவரும் குண்டு காயம் அடைந்தார். இந்த படு கொலை, பட்டப்பகலில் நடந்தது.
 
கொல்லப்பட்ட பிரிஜ்நாதி சிங், கடந்த 2010 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் முன்னாள் முதலமைச்சர் ராப்ரி தேவியை எதிர்த்து போட்டியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil