Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

காதலனை மணக்க, நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு போதை மருந்து கொடுத்த மணப்பெண்

காதலனை மணக்க, நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு போதை மருந்து கொடுத்த மணப்பெண்
, புதன், 25 பிப்ரவரி 2015 (16:18 IST)
மணப்பெண் ஒருவர் காதலனை மணக்கவேண்டி, தனக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனுக்கு போதை மருந்து கொடுத்துள்ளார்.
 
உத்தரபிரதேச மாநிலத்தில், சில தினங்களுக்கு முன்பு கிஷோர் என்பவருக்கும், இந்திரவதி என்ற பெண்ணுக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இந்நிலையில் அவர் திருமணத்தன்று, போதையில் சுமார் இரண்டு மணிநேரம் தாமதமாக மண்டபத்திற்கு வந்துள்ளார்.
 
ஆனால் அதற்குள், இந்திரவதிக்கும் திருமணத்திற்கு வந்த மற்றொரு வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இதனை அறிந்து கிஷோர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதற்கு காரணமாக, கிஷோர் போதையில் இருந்ததாக பெண் வீட்டார் கூறியுள்ளனர்.
 
இதனை மறுத்துள்ள கிஷோர், ”10 நாட்களுக்கு முன்னதாக எங்களுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது வெற்றிலையால் செய்யப்பட்ட பாரம்பரிய இனிப்பு எனக்கு கொடுக்கப்பட்டது. அதற்கு பின்னர் என்னால் எப்போதும் போல் இயல்பாக இருக்க முடியவில்லை.
 
மேலும், நான் சுவரில் முட்டிக் கொண்டேன். இதையடுத்து உடனடியாக மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று மயக்கம் தெளிந்து திருமண மண்டபத்திற்கு வந்தேன். ஆனால் அதற்குள் இந்திரவதிக்கும், அவருடைய உறவினருக்கும் திருமணம் நடந்துவிட்டது.
 
அவர் தனது இரகசிய காதலரை திருமணம் செய்ய எனக்கு போதை மருத்து கொடுத்துவிட்டார். இதற்கு பெண் வீட்டார் உடந்தையாக இருந்தனர்” என்று தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக கிஷோர் குடும்பத்தினருக்கும், இந்திரவதி குடும்பத்தினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil