Webdunia - Bharat's app for daily news and videos

Install App

2 இன்ச் உயரம் குறைந்த பாவாடையால் ரூ.50 ஆயிரம் அபராதம்

Webdunia
செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (01:05 IST)
டெல்லியில் மணப்பெண் ஒருவர் தன்னுடைய திருமண தினத்தன்று அணியும் பாவாடையின் உயரம் 2 இன்ச் குறைவாக இருந்ததாக தொடுத்த வழக்கில் வெற்றி பெற்றார். இதனால் அந்த பாவாடையை தைத்து கொடுத்த டிசைனருக்கு ரூ.50 ஆயிரம் நீதிமன்றம் அபராதம் விதித்தது.



 
 
டெல்லியை சேர்ந்த ஒரு பெண் கடந்த 2008ஆம் ஆண்டு தனது திருமணத்திற்காக லெஹாங்கே (lehanga) என்று கூறப்படும் திருமண உடையை தைக்க கொடுத்திருந்தார். இது நம்மூர் பாவாடையை போல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த பாவாடையின் உயரம் அவர் கொடுத்த அளவைவிட 2 இன்ச் குறைவாக இருந்ததாம். உயரத்தை சரிசெய்து கொடுக்க அந்த பெண் கேட்டபோது அதிகப்படியான வேலைப்பளு இருந்ததால் டிசைனர் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து அந்த பெண் தொடுத்த வழக்கு கடந்த 8 ஆண்டுகளாக நீதிமன்றத்தில் நடைபெற்றது. இறுதியில் தற்போது டிசைனர் ரூ.50,000 அபராதமும், அந்த பாவாடையின் மதிப்பான ரூ.14 ஆயிரம் ஆக மொத்தம் ரூ.64 ஆயிரம் அந்த பெண்ணுக்கு வழங்க உத்தரவிட்டது.  
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கவுரவ விரிவுரையாளர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்ப்பதா? அன்புமணி கண்டனம்..!

டிரம்ப் மனமாற்றத்தால் 1471 புள்ளிகள் உயர்ந்த சென்செக்ஸ்.. முதலீட்டாளர்கள் குஷி..!

25 கோடி ஏழைகளை பணக்காரர்களாக்கியுள்ளோம்! பாஜகவின் சாதனைகள் என்ன? - பட்டியலிட்ட பிரதமர் மோடி!

ஜனாதிபதி மாளிகையில் சி.ஆர்.பி.எப் வீராங்கனைக்கு திருமணம்.. வரலாற்றில் முதல் முறை..!

24 மணிநேரத்தில் அரசியல் சாசனப்படி முடிவெடுக்க வேண்டும்: ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்..

அடுத்த கட்டுரையில்