Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உயிரோடு விளையாடும் சிறுவர்களின் சாகச வீடியோ

உயிரோடு விளையாடும் சிறுவர்களின் சாகச வீடியோ
, சனி, 16 ஜூலை 2016 (21:33 IST)
உத்திரபிரதேசத்தில் 7 சிறுவர்கள், ஒரு மேம்பாலத்தில் ரயில் வந்து கொண்டிருக்கும் போது, அங்கிருந்து கீழே உள்ள ஆற்றில் குதிக்கும் அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.


 

 
உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபத்தில் உள்ள ஒரு ஆற்றில் உள்ள மேம்பாலத்தில் வழக்கமாக குறிப்பிட்ட நேரங்களில் ரயில்கள் செல்லும். அங்கு வீர சாகசம் செய்ய நினைத்த 7 சிறுவர்கள், அந்த பாலத்தில் மேல் நின்று கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ஒரு ரயில் வருகிறது. அந்த ரயில் அருகில் வரும் போது, அவர்கள் ஒவ்வொருவராக கீழே உள்ள ஆற்றில் குதிக்கிறார்கள். கண்ணிமைக்கும் நேரத்தில், அந்த ரயில் அவர்களை கடந்து செல்கிறது. அதை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.
 
இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் இன்று ஒளிபரப்பப்பட்டது. இதைக் கண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சமூக வலைத்தளங்களிலும், இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.
 

Courtesy to ANI News

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயன்ற 3,000 ராணுவத்தினர் தடுத்து வைப்பு