Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆந்திராவில் கிரிக்கெட் பந்து தாக்கி 6 வயது சிறுவன் பலி

ஆந்திராவில் கிரிக்கெட் பந்து தாக்கி 6 வயது சிறுவன் பலி
, வெள்ளி, 24 ஏப்ரல் 2015 (16:45 IST)
கிரிக்கெட் விளையாடிய போது பந்து தாக்கி ஆறு வயது சிறுவன் உயிரிழந்தார்.
 
ஆந்திர மாநிலம் ஹைதராபாத் வனஸ்தாலிபுரம் சகாரா எஸ்டேட்ட் பகுதியை சேர்ந்த சிறுவன்ம வம்சி கிருஷ்ணா(6) அங்குள்ள மைதானம் ஒன்றில் 12 வயதுக்குட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக சிறுவனை பந்து தாக்கியதில் சிறுவன் மயங்கி விழுந்தான்.
 
இதையடுத்து மயங்கி விழுந்த சிறுவனை அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
 
சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
 
இச்சம்பவத்தில் சிறுவனை காயபடுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இருந்திருக்க வாய்ப்பு இல்லை இருந்தாலும் இது குறித்து இந்திய தண்டனை சட்டம் 174 ஆவது பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil