Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல்வர் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்: ஒருவர் கைது

Webdunia
திங்கள், 2 ஏப்ரல் 2018 (13:20 IST)
புதுச்சேரி முதல்வர் நாராயண சாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த  நபரின் தந்தையை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
 
புதுச்சேரி போலீஸ் கட்டுபாட்டு அறை தொலைபேசிக்கு இன்று அழைப்பில் பேசிய மர்ம நபர், முதல்வர் நாரயாணசாமி வீட்டில் வெடிகுண்டு வைத்துள்ளதாக மிரட்டியுள்ளார். இதனால் வெடிகுண்டு நிபுணர்கள் முதல்வர் வீட்டில் அதிரடியாக  சோதனை செய்தனர். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வதந்தியை பரப்பும் நோக்கில் அந்த மர்ம நபர் பேசியிருப்பது தெரியவந்தது.
 
இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரனையில், தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் விழுப்புரத்தை சேர்ந்த புண்ணியமூர்த்தி என்பவரின் மகன் புவனேஷ்வர் என்பது தெரியவந்தது. 
 
இதனையடுத்து, போலீசார் புவனேஷ்வர்ரை விசாரிக்க சென்ற போது அவன் தலைமறைவாகியுள்ளான். அதனால் அவரது தந்தை புண்ணியமூர்த்தியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

30 வருடத்திற்கு முன் ஜெயலலிதா செய்த தப்பை இப்போது ஸ்டாலின் செய்கிறார்: பத்திரிகையாளர் மணி

தமிழகத்தில் இன்னும் ஒரு வாரம் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

அடுத்த கட்டுரையில்
Show comments