Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல்! மும்பையில் பரபரப்பு..!

Siva
ஞாயிறு, 17 நவம்பர் 2024 (12:32 IST)
மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
கடந்த சில மாதங்களாகவே நாட்டின் பல பகுதிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்து கொண்டிருக்கிறது என்பதும், கிட்டத்தட்ட அனைத்துமே போலி வெடிகுண்டு மிரட்டல் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
இந்த நிலையில், மும்பையில் உள்ள இந்திய ரிசர்வ் வங்கிக்கு வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் மிரட்டல் வந்து உள்ளதை அடுத்து காவல்துறையினர் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் 
 
இதனை அடுத்து காவல்துறை மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மும்பை இந்திய ரிசர்வ் வங்கியை சோதனை செய்ததில் எந்த விதமான வெடிகுண்டு பொருட்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதனை அடுத்து, இது ஒரு போலி மிரட்டல் என்பது தெரிய வந்துள்ளது.
 
மேலும், மிரட்டல் விடுத்த நபர் ஒரு பாடல் பாடியதாகவும், மிரட்டல் விடுத்த நபர் வாடிக்கையாளர் சேவை எண்ணின் மூலம் தொடர்பு கொண்டு தன்னை ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் என்று அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்த வாரத்தில் 2வது நாளாக உயரும் தஙக்ம் விலை.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அரசு பேருந்துகளின் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!

ஆன்லைன் விளையாட்டில் தமிழக அரசின் விதிமுறைகள்: விளையாட்டு நிறுவனங்களின் மனுக்கள் தள்ளுபடி

கணவன் - மனைவி என்று கூறி வாடகைக்கு வீடு எடுத்த காதல் ஜோடி.. ஒரே வாரத்தில் விபரீத முடிவு..!

சென்னைக்குக் சிகிச்சைக்காக வந்த 8 நாள் குழந்தை விமானத்தில் உயிரிழப்பு: பெரும் சோகம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments