Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்

Webdunia
வியாழன், 15 அக்டோபர் 2015 (00:35 IST)
திருப்பதி ரயில் நிலையத்திற்கு மர்ம நபர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
திருப்பதி ரயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு, ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம மனிதர், திருப்பதி ரயில் நிலையத்தில் 8 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறி தொடர்ப்பை துண்டித்தார். இதை கேட்டு கடும் அதிர்ச்சியடைந்த ரயில்வே அதிகாரி, உடனே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மற்றும் ரயில்வே போலீசார் வெடிகுண்டு நிபுணர்களுடன் ரயில் நிலையம் முழுவதையும் மோப்ப நாய்களுடன் சோதனை செய்தனர். பயணிகளின் உடைமைகளையும் வெடிகுண்டு நிபுணர்கள் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன்  சோதனை செய்தனர். ஆனால், இதுவரை வெடிகுண்டுகள் கிடைக்கவில்லை.
 
மேலும், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவை சீர்குலைக்க சதி நடைபெறுகிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெறுகிறது. 
 

5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டர் .! இந்த வினோத சம்பவம் எங்கு தெரியுமா.?

காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு.! அதானி நிறுவனத்திற்கு எதிராக இலங்கையில் வழக்கு!!

சிறுவன் உயிரிழந்ததன் எதிரொலி.! வனத்துறை வசம் செல்கிறது குற்றால அருவிகள்..!!

புது உச்சத்தை நோக்கி தங்கம் விலை.. ரூ.55000ஐ நெருங்கியது ஒரு சவரன் விலை..!

ஓட்டலுக்குள் புகுந்து சூறையாடிய 5"பேர் கொண்ட கும்பலை சி.சி.டி.வி காட்சிகளை வைத்து போலீசார் தேடுதல் வேட்டை!

Show comments