Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேற்கு வங்கத்தில் பயங்கர குண்டு வெடிப்பு: 4 பேர் பலி

Webdunia
திங்கள், 2 மே 2016 (11:13 IST)
மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் வீடு ஒன்றில் வெடிகுண்டு தயாரித்துக் கொண்டிருந்த போது, திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 10க்கும் மேற்பட்டோர் உடல் சிதறி படுகாயம் அடைந்த நிலையில், மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.


 
 
படுகாயம் அடைந்தவர்களில் 4 பேர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர். 6 பேர் படுகாயத்துடன் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்த குண்டு வெடிப்பு சரியாக நேற்றிரவு 11.30 நிகழ்ந்துள்ளது.
 
குண்டு தயாரித்தவர்கள் அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களா அல்லது கூலிப்படையினரா என்பது குறித்த தகவல்களை காவல்துறை ரகசியமாக வைத்துள்ளது. இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் இறந்த 4 பேர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
 
மேற்குவங்கத்தில் கடந்த சனிக்கிழமை 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு நடந்தது. இந்த வாக்குப்பதிவில் நடந்த வன்முறை காரணமாக 186 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பில் அரசியல் கட்சி சம்பந்தப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments