Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகாராஷ்டிரா மாநில புலிகள் பாதுகாப்பு தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்

மகாராஷ்டிரா மாநில புலிகள் பாதுகாப்பு தூதுவராக அமிதாப்பச்சன் நியமனம்
, வியாழன், 13 ஆகஸ்ட் 2015 (05:01 IST)
மகராஷ்டிரா மாநிலத்தில், புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
 

 
மகராஷ்டிரா மாநிலத்தில், கடந்த ஏழு மாதங்களில் 41 புலிகள் கொல்லப்பட்டதாக தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம் வேதனை தெரிவித்துள்ளது. இதனால், புலிகளை பாதுகாக்க, ஜூலை 29ஆம் தேதியை உலக புலிகள் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனையடுத்து, கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் நடிகர் அமிதாப் பச்சனை புலிகள் பாதுகாப்பு பிரச்சார சிறப்பு தூதராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
 
இதனை அமிதாப் பட்சனும் ஏற்றுக் கொண்டார். இதனையடுத்து புலிகள் பாதுகாப்பு பிரசார தூதராக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். 
 

Share this Story:

Follow Webdunia tamil